Thursday, 11 June 2020

மாயப் புன்னகை - க.மோகனரங்கன்

புகழ்பெற்ற ஓவியங்கள் உலகமுழுவதிலும் பலவுண்டு. இருப்பினும் பாரீஸில், லூவர் அருங்காட்சியகத்திலுள்ள திருமதி ஜொகாந்தோ என்கிற டாவின்சியின் ஒவியம் , அதன்
உருவாக்கத்தினாலும் , அதன் பின்னணி குறித்த தகவல்கள் மற்றும் கதைகளாலும் கிட்டதட்ட ஒரு தொன்மமாகவே ஆக்கப்பட்டுவிட்டது . தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் அவ் ஓவியம் இடையில் ஒரு முறை திருட்டுபோய் , இரண்டு வருடங்கள் கழித்து திரும்பக்கிடைக்கிறது. இது பற்றிய விவரங்கள் ஏராளமாக இணையத்தில் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு, அதன் இடைவெளிகளை தன் கற்பனையால் இட்டுநிரப்பி, அழகானதொரு புனைவாக இச் சிறுநாவலை எழுதியிருக்கிறார் எம். கோபாலகிருஷ்ணன். இதன் முடிவு சற்றே கதைத்தனமாக இருப்பதற்கு பதிலாக , கொஞ்சம் கவித்துவமாக அமைந்திருக்கலாமோ என்று தோன்றியது. மற்றபடி பலரும் அறிந்த தகவல்களை எடுத்துக்கொண்டு அதைக் கலையாக்குவது என்பது , கண்ணிற்கும் முன்பாகவே தொப்பிக்குள் கைக்குட்டையை வைத்துவிட்டு
 முயல்குட்டியை வெளியேஎடுப்பது போன்றது.
மாயப் புன்னகையில் அந்த மாயம் நிகழ்ந்திருக்கிறது.

க.மோகனரங்கள் 01 மே 2020

No comments:

Post a Comment

மொழிபெயர்ப்புக் கலையும் ஆர்.சிவகுமார் எனும் கலைஞரும்

  ஆர்.சிவகுமார் சாரை எப்போது நான் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், இலக்கியத் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நான் அறிந்த ஒர...