சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி பொருட்படுத்தாமல் தங்களுக்குப் பிடித்த பணியில் விரும்பி ஈடுபட்டிருப்பார்கள். அவ்வாறான ஒரு நண்பர் திரு சரவணன். Saravanan Karmegam கடந்த சில வருடங்களாக அவரைத் தெரியும். நேரில் இதுவரை சந்தித்ததில்லை. பத்து வருடங்களுக்கும் மேலாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். புதுமைப்பித்தன் தொடங்கி திருச்செந்தாழை வரைக்குமான எழுத்தாளர்களின் 60 கதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். ப சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் 34 அத்தியாயங்கள் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறந்த பல ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.
அவரது தளத்தில் என்னுடைய ஏழு சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன.
‘அம்மன் நெசவு’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட பெரும் ஆர்வத்துடன் இருந்தபோதும் வெளியிடுவதற்கு பதிப்பகங்கள் எதுவும் இன்னும் அமைந்தபாடில்லை.
அக்கறையுடன் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது மொழிபெயர்ப்புகளை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment