Thursday 11 June 2020

மாயப் புன்னகை - க.மோகனரங்கன்

புகழ்பெற்ற ஓவியங்கள் உலகமுழுவதிலும் பலவுண்டு. இருப்பினும் பாரீஸில், லூவர் அருங்காட்சியகத்திலுள்ள திருமதி ஜொகாந்தோ என்கிற டாவின்சியின் ஒவியம் , அதன்
உருவாக்கத்தினாலும் , அதன் பின்னணி குறித்த தகவல்கள் மற்றும் கதைகளாலும் கிட்டதட்ட ஒரு தொன்மமாகவே ஆக்கப்பட்டுவிட்டது . தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் அவ் ஓவியம் இடையில் ஒரு முறை திருட்டுபோய் , இரண்டு வருடங்கள் கழித்து திரும்பக்கிடைக்கிறது. இது பற்றிய விவரங்கள் ஏராளமாக இணையத்தில் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு, அதன் இடைவெளிகளை தன் கற்பனையால் இட்டுநிரப்பி, அழகானதொரு புனைவாக இச் சிறுநாவலை எழுதியிருக்கிறார் எம். கோபாலகிருஷ்ணன். இதன் முடிவு சற்றே கதைத்தனமாக இருப்பதற்கு பதிலாக , கொஞ்சம் கவித்துவமாக அமைந்திருக்கலாமோ என்று தோன்றியது. மற்றபடி பலரும் அறிந்த தகவல்களை எடுத்துக்கொண்டு அதைக் கலையாக்குவது என்பது , கண்ணிற்கும் முன்பாகவே தொப்பிக்குள் கைக்குட்டையை வைத்துவிட்டு
 முயல்குட்டியை வெளியேஎடுப்பது போன்றது.
மாயப் புன்னகையில் அந்த மாயம் நிகழ்ந்திருக்கிறது.

க.மோகனரங்கள் 01 மே 2020

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...